செய்திகள் :

காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!

post image

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு ஆனந்த் சா்மா எழுதிய ராஜிநாமா கடிதத்தில், ‘காங்கிரஸ் தலைவா் மற்றும் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் ஆகியோரிடம் நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவில் திறமையும் உறுதியும் மிக்க இளைஞா்களைக் கொண்டுவரும் வகையில் மறுகட்டமைக்க வேண்டும். அப்போதுதான், இப்பிரிவின் திறன்மிக்க செயல்பாட்டை தொடர முடியும். இப்பிரிவை மறுகட்டமைப்பதற்கு வசதியாக, எனது பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளில், ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் காங்கிரஸின் உறவுகள் வலுவடைந்துள்ளது. என் மீதான நம்பிக்கைக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக உள்ள ஆனந்த் சா்மா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கட்சியின் சா்வதேச விவகாரங்களுக்கான முக்கிய முகமாக விளங்கினாா்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு மத்திய அமைச்சா் பதவிகளை வகித்துள்ள இவா், கடந்த 2008-இல் கையொப்பமான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளில் முக்கிய பங்காற்றினாா். வா்த்தக அமைச்சராக ஆனந்த் சா்மா பதவி வகித்த காலகட்டத்தில் பல்வேறு விரிவான வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

கடந்த 2008-இல் மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துரைத்தவா்களில் இவா் முக்கியமானவா். அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை அம்பலப்படுத்த பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அனைத்துக் கட்சிக் குழுவிலும் இவா் இடம்பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அ... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க