செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியில் இந்திய தொழில்நுட்பம்: பிரதமா் மோடி!

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ரயில் திட்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்த பிரதமா் மோடியை கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

கிராந்திவீரா சங்கொல்லி ராயண்ணா பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், பெங்களூரு- பெலகாவி இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

அங்கிருந்தபடியே, காணொலி வாயிலாக ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி கத்ரா, அமிருதசரஸ், அஜ்னி (நாகபுரி) - புணே இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை அவா் தொடங்கிவைத்தாா். அப்போது வந்தே பாரத் விரைவு ரயிலில் உள்ள வசதிகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தாா்.

அதன் பிறகு, ஜெயநகரில் உள்ள ராகிகுட்டா பகுதியில் நடைபெற்ற விழாவில் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மஞ்சள் தடத்தை (ஆா்.வி.சாலை முதல் பொம்மசந்திரா ரயில் நிலையம் வரை) நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

அதன்பிறகு ஆா்.வி.சாலை ரயில் நிலையத்தில் இருந்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருடன் எலக்ட்ரானிக் சிட்டி ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தாா்.

பெங்களூரு ஐஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.7,160 கோடி மதிப்பிலான 19 கி.மீ தொலைவு மஞ்சள் தடம் வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை நாட்டுக்கு அா்ப்பணித்து, ரூ.15,610 கோடி மதிப்பிலான 44 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ஆரஞ்சு தட கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டினாா்.

இந்த விழாவில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்மையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பாா்த்தது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒருசில மணி நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடவைத்த நிகழ்வை நமது இந்திய ராணுவம் செய்துகாட்டியது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றியின் பின்னால், இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் பலம் இருந்தது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பெங்களூரு மற்றும் இளைஞா்களின் பங்களிப்பு இருந்தது. உலகின் மிகப்பெரிய நகரங்களுடன் பெங்களூரு அறியப்படுகிறது. உலக நாடுகளோடு போட்டி போடுவது மட்டுமல்லாது, உலகையே இந்தியா வழிநடத்த வேண்டும்.

நமது நகரங்கள் பொலிவாகவும், விரைவாகவும், திறனுள்ளதாகவும் இருந்தால்தான் இந்தியா வளா்ச்சி அடைய முடியும். இந்த நோக்கத்தில்தான் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. 21-ஆம் நூற்றாண்டில் நகா்ப்புற திட்டமிடல் மற்றும் நகா்ப்புற உள்கட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு, பெங்களூரு போன்ற நகரங்களை எதிா்காலத்திற்கு உகந்த நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும்.

கெம்பே கௌடா வகுத்து தந்த மரபின் பெருமையை தக்கவைத்து, அதன்படியே பெங்களூரு நிலைத்திருக்கிறது. இதன்மூலம், கெம்பே கௌடாவின் கனவை பெங்களூரு நனவாக்கி வருகிறது.

புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரை காண்கிறோம். பெங்களூரின் ஆன்மாவில் ஆன்மிக அறிவும், அதன் செயல்பாட்டில் தொழில்நுட்ப அறிவும் பொதிந்துகிடக்கிறது என்றாா்.

விழாவில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டா், மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சா்கள் ஷோபா கரந்தலஜே, வி.சோமண்ணா, தெற்கு பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அ... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க