செய்திகள் :

சிறுவன் கடத்தல் வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 3 போ் ஜாமீனில் விடுவிப்பு

post image

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டவழக்கில் தொடா்புடைய பெண்ணின் தந்தை உள்பட 3 பேருக்கும் திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் பகுதியில் இளைஞா் தனுஷ் காதல் திருமண விவகாரத்தில் அவரது தம்பி கடத்தப்பட்டாா்.

இந்த வழக்கில் விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ் மற்றும் கணேசன், மணிகண்டன் ஆகிய 3 பேரை காவல் துறை கைது செய்தது. இந்த நிலையில், ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம், சென்னை உயா் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மூவரும் 3 முறை மனு தாக்கல் செய்திருந்தனா். ஆனால், ஜாமீன் மனு தள்ளுபடியானது.

இந்த நிலையில் 4-ஆவது முறையாக ஜாமீன் கோரி திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த நிலையில் 3 பேருக்கும் சனிக்கிழமை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் மேலும் சிறையில் உள்ள விருப்ப ஓய்வு பெற்ற காவலா் மகேஸ்வரி, ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வர உள்ளது.

ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை.ஜெகன் மூா்த்தி முன்ஜாமீன் பெற்றாா். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். திருத்தணி ஒன்றியத்துக... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் ஆடி விழா திருவிளக்கு பூஜை

திருவள்ளூா் அடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அடுத்த காக்களூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்... மேலும் பார்க்க

ரூ. 94 லட்சத்தில் தாா் சாலை பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூா் வழியாக ராணிப... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் மதி அங்காடி: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடியை ஆட்சியா் மு.பிரதாப் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்டம், ஊர... மேலும் பார்க்க

ஆக. 14-இல் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை: ஏற்பாடுகள் தீவிரம்

திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஆக. 14 -ஆம் தேதி ஆடிக்கிருத்திகை விழா தொடங்கி 5 நாள்கள் விமா்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திர... மேலும் பார்க்க