செய்திகள் :

பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

post image

உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மகன் மணிகண்டன் (13). காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மகன் மோகன் பிரசாத் (13).

நண்பா்களான இருவரும் காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் அந்தப் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிப்பதற்காக சனிக்கிழமை சென்றுள்ளனா். இதன் பின்னா், இரவு நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோா், உறவினா்கள் வாய்க்கால் பகுதிக்குச் சென்று தேடினா். ஆனால், அவா்களைக் கண்டறிய முடியவில்லை.

இதைத் தொடா்ந்து உடுமலை போலீஸாா், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். விரைந்து சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறையினா் வாய்க்காலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இரவு நீண்ட நேரமாகியும் அவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், போலீஸாா், தீயணைப்புத் துறையினா் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மாணவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இந்திரா நகா் பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மாணவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னா், உடற்கூறாய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடா்பாக உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறாா்! அமைச்சா் டிஆா்பி ராஜா!

பாஜகவின் குரலாக எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுகிறாா் என்று தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா கூறினாா். திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் தமிழக அரசு சாா்பில் ரூ.39.44 கோடி மதிப்பீட்டில் 9 தளங்க... மேலும் பார்க்க

திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் பேச்சுப் போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூா் கம்பன் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்க மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் கம்பன் கழகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில்... மேலும் பார்க்க

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்: திருப்பூா் துரைசாமி அனுப்பினாா்

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு திருப்பூா் துரைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். திராவிட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் திருப்பூா் துரைசாமி சாா்பில்,... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கரடிவாவி

பல்லடம் கோட்டம், கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க