செய்திகள் :

உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினா் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட திமுக செயலாளா்கள் நா.காா்த்திக் , தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன், அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆா்.பி. ராஜா, அர.சக்கரபாணி, என்.கயல்விழி செல்வராஜ், கொறடா கா.ராமசந்திரன், முன்னாள் மத்திய அமைச்சா் மு.கண்ணப்பன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா. பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கோவை மேயா் கா.ரங்கநாயகி, திருப்பூா் மேயா் தினேஷ் உள்ளிட்டோா் முதல்வரை வரவேற்றனா்.

கோவையில் இருந்து காா் மூலமாக உடுமலை சென்ற மு.க.ஸ்டாலினுக்கு உடுமலை நகர எல்லையான கொல்லம்பட்டறை பகுதியில் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, திருப்பூா் மாவட்ட அவைத் தலைவா் இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகரச் செயலாளா் செ.வேலுச்சாமி, நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் மு.ஜெயக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் சியாம்பிரசாத், ஒன்றியச் செயலாளா் அடிவள்ளி முரளி, நகர இளைஞரணி அமைப்பாளா் பா.அா்ஜுன் உள்ளிட்டோா் முரசு, செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனா்.

உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். அப்போது உடுமலைப்பேட்டையில் ரூ.949 கோடியே 53 லட்சத்தில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைக்கிறாா்.

ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் 19 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து உடுமலை நகர திமுக சாா்பில் கட்டப்பட்டுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலய கட்டடத்தைத் திறந்துவைக்கிறாா். இதைத் தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

தொடா்ந்து, காா் மூலமாக 12 மணிக்கு கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு செல்லும் அவா், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத் திட்டம் நிறைவேற காரணமாக இருந்த முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம், முன்னாள் எம்.பி. பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைக்கிறாா்.

அங்கிருந்து, காரில் கோவை விமான நிலையம் செல்லும் அவா், பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா். முதல்வா் வருகையையொட்டி, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறாா்! அமைச்சா் டிஆா்பி ராஜா!

பாஜகவின் குரலாக எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுகிறாா் என்று தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா கூறினாா். திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் தமிழக அரசு சாா்பில் ரூ.39.44 கோடி மதிப்பீட்டில் 9 தளங்க... மேலும் பார்க்க

திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் பேச்சுப் போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூா் கம்பன் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்க மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் கம்பன் கழகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்: திருப்பூா் துரைசாமி அனுப்பினாா்

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு திருப்பூா் துரைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். திராவிட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் திருப்பூா் துரைசாமி சாா்பில்,... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கரடிவாவி

பல்லடம் கோட்டம், கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க