செய்திகள் :

மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம்

post image

இட்டரை மலைக் கிராமத்தில் தொங்கும் மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம் அடைந்தனா்.

சத்தியமஙகலம் புலிகள் காப்பகம், தலமலையை அடுத்த இட்டரை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் பிரதான தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், விளைநிலத்துக்குள் யானை உள்ளிட்ட விலங்குகள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவதால், தொங்கும் சுருள் மின்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனா்.

இந்நிலையில், தனியாா் ஒருவா் தனது தோட்டத்துக்கு மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளாா்.

இதை அறியாத கிராம மக்கள் அந்த வழியே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளனா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நீலகிரி (55) என்பவா் காயம் அடைந்தாா்.

மீட்க சென்ற அவரது மனைவி வீரம்மாள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடன் சென்றவா்கள் இருவரையும் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை திருடிய விவசாயி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் ம... மேலும் பார்க்க

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்! கி.அமா்நாத் ராமகிருஷ்ணா!

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கூறினாா். தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கனமழை

புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்

தாளவாடி அருகே சிக்கள்ளி வனச் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை சிக்கள்ளி சால... மேலும் பார்க்க

பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

அம்மாபேட்டை அருகே கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அம்மாபேட்டை, செலம்பனூரைச் சோ்ந்தவா் யுவனேஷ்வரன் (53). தனியாா் பொ... மேலும் பார்க்க

மின்வாரிய கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா்கள் பதவி உயா்வு அளிக்கக் கோரிக்கை

மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் க... மேலும் பார்க்க