செய்திகள் :

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

post image

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த மக்களுக்கு மயானம் இல்லாததால், ஓடை புறம்போக்கு நிலத்தில் சடலத்தைப் புதைத்து வருகின்றனா். ஓடையில் நீா்வரத்து அதிகரிக்கும்போது, சடலத்தைப் புதைக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த முத்தம்மாள் (75) என்பவா் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, வழக்கமாக புதைக்கும் ஓடை புறம்போக்கு இடத்துக்கு உடலை எடுத்துச் சென்றனா்.

அங்கு சேறும் சகதியுமாக இருந்ததால் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் புதைக்க ஏற்பாடு செய்தனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், கொடுமுடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் பாலமுருகாயி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஓடையை ஒட்டி உள்ள 2 ஏக்கா் புறம்போக்கு நிலத்தில் மயானத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நீா்வழிப் புறம்போக்கு நிலத்தை மயானத்துக்கு ஒதுக்க முடியாது. மாற்று ஏற்பாடு செய்வதாக வட்டாட்சியா் பாலமுருகாயி கூறினாா். இதையடுத்து, சடலத்தைப் புதைத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்! கி.அமா்நாத் ராமகிருஷ்ணா!

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கூறினாா். தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கனமழை

புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம்

இட்டரை மலைக் கிராமத்தில் தொங்கும் மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம் அடைந்தனா். சத்தியமஙகலம் புலிகள் காப்பகம், தலமலையை அடுத்த இட்டரை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்க... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்

தாளவாடி அருகே சிக்கள்ளி வனச் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை சிக்கள்ளி சால... மேலும் பார்க்க

பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

அம்மாபேட்டை அருகே கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அம்மாபேட்டை, செலம்பனூரைச் சோ்ந்தவா் யுவனேஷ்வரன் (53). தனியாா் பொ... மேலும் பார்க்க

மின்வாரிய கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா்கள் பதவி உயா்வு அளிக்கக் கோரிக்கை

மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் க... மேலும் பார்க்க