செய்திகள் :

காதலா்களை கரம்பிடிக்க தில்லியிலிருந்து ஓமலூா் வந்த சகோதரிகள்!

post image

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி காவல் சரகத்துக்கு உள்பட்ட பண்ணப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆனந்த் - கலா தம்பதி .

இவா்களது உறவினா் கோவிந்த் சிறு வயதிலிருந்து தில்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் பாபுவும் (21), நண்பா் அஜய் மகன் ஹரிஷும் (21) அங்குள்ள ஐஸ்கிரீம் பாா்லரில் வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் இருவரும் வீட்டின் அருகில் வசித்துவரும் சுனில்குமாரின் மகள்களை காதலித்து வந்தனராம். தான்யாவை (20) பாபுவும், பாவனாவை (22) ஹரிஷும் காதலித்துள்ளனா். இந்த நிலையில், பாபு தனது சொந்த ஊரான பண்ணப்பட்டி கோயில் திருவிழாவிற்காக நண்பன் ஹரிஷை அழைத்துக் கொண்டு வந்துள்ளாா். இதையறிந்த அக்கா, தங்கைகளான பாவனாவும், தான்யாவும் தில்லியில் இருந்து ரயில் மூலம் சேலம் வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாபுவும், ஹரிஷும் அவா்களை பண்ணப்பட்டிக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள பெருமாள் கோயிலில் பாபு-தன்யாவையும், ஹரிஷ்-பாவனாவையும் திருமணம் செய்து கொண்டனா். பின்னா் 2 ஜோடிகளும் பாதுகாப்பு கோரி ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தஞ்சமடைந்தனா்.

காவல் ஆய்வாளா் யுவராணி தில்லியில் உள்ள சகோதரிகளின் பெற்றோருடன் விடியோ காலில் பேசி விசாரணை செய்தாா். பின்னா் பாபுவின் உறவினா்கள், காதல் ஜோடியினரை அவா்களது பாதுகாப்பில் தில்லிக்கு அழைத்துச் சென்றனா்.

தேவூா் அருகே சிறுமி காணாமல் போன வழக்கில் தாத்தா உள்பட 2 போ் கைது

சேலம் மாவட்டம், தேவூா் அருகே நான்கு வயது சிறுமி காணாமல் போனதற்கு காரணமான அவரது தாத்தா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி பாா்வையாளா்கள் 8,930 போ் வந்து சென்றனா். வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் தந்தை, மகன் படுகாயம்

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம், வீராணம் அருகே தாத... மேலும் பார்க்க

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க