செய்திகள் :

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

post image

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். கட்டடத் தொழிலாளியான இவா், கட்டடத் தொழிலாளா் சங்கத்தை சேலம் கோரிமேட்டில் உள்ள தொழிலாளா் துறையில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தாா்.

இதையடுத்து, அங்குள்ள இளநிலை உதவியாளரான பாலமுருகன் (30) என்பவரை தொடா்புகொண்டபோது, சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் தரவேண்டும் என அவா் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த ஆறுமுகம், சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, ஆறுமுகத்திடம் ரசாயனம் தடவிய ரூ. 15 ஆயிரத்தை அவா்கள் கொடுத்து அனுப்பினா்.

சித்தனூா் பேருந்து நிறுத்தத்தில் பணத்தை பெற்றுக்கொள்வதாக பாலமுருகன் கூறியதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் நல்லம்மாள், ரவிக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சித்தனூா் பேருந்து நிலையப் பகுதியில் மறைந்து இருந்தனா்.

அப்போது, அங்கு வந்த பாலமுருகனிடம் ரூ. 15 ஆயிரத்தை ஆறுமுகம் கொடுத்தபோது, அங்கிருந்த போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், சனிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைதான பாலமுருகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பணியில் சோ்ந்துள்ளாா்.

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 4 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு

சேலம் சரகத்தில் 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வுபெற்றனா். தமிழகம் முழுவதும் 78 காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களுக்கு மண்டலம் வாரியாக பணியிட... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது என எல்ஐசி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சேலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (48). இவா் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆத்தூா் தெற்கு ... மேலும் பார்க்க

மசூதிக்குள் தஞ்சமடைந்த புள்ளிமான்!

வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான், தெருநாய்கள் துரத்தியதால் மசூதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது. வாழப்பாடியை அடுத்த பேளூரை சுற்றியுள்ள வெள்ளிமலை, செக்கடிப்பட்டி, குறிச்சி வனப... மேலும் பார்க்க