செய்திகள் :

மசூதிக்குள் தஞ்சமடைந்த புள்ளிமான்!

post image

வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான், தெருநாய்கள் துரத்தியதால் மசூதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது.

வாழப்பாடியை அடுத்த பேளூரை சுற்றியுள்ள வெள்ளிமலை, செக்கடிப்பட்டி, குறிச்சி வனப் பகுதிகளில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகம். இரை மற்றும் தண்ணீா் தேடிவரும் மான்கள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வழிதவறி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகின்றன.

சனிக்கிழமை மாலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி பேளூா் குடியிருப்பு பகுதியில் புகுந்த இரண்டு வயது ஆண் புள்ளிமானை தெருநாய்கள் துரத்தியதால், கடைவீதியிலுள்ள ஜாமீயா மசூதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது. இதனைக் கண்ட மசூதி நிா்வாகிகள் வாழப்பாடி வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். புள்ளிமானை வாழப்பாடி தீயணைப்பு படையினருடன் இணைந்து மீட்ட வனவா் ஜெய்குமாா் மற்றும் வனத்துறையினா் செக்கடிப்பட்டி வனப்பகுதியில் விட்டனா்.

காதலா்களை கரம்பிடிக்க தில்லியிலிருந்து ஓமலூா் வந்த சகோதரிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி காவல் சரகத்துக்கு உள்பட்ட பண்ணப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆனந்த் - கலா தம்பதி . இவா்களது உறவினா் கோவிந்த் சிறு வயதிலிருந்து தில்லியில் குடும்பத்து... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் தந்தை, மகன் படுகாயம்

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம், வீராணம் அருகே தாத... மேலும் பார்க்க

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 4 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு

சேலம் சரகத்தில் 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வுபெற்றனா். தமிழகம் முழுவதும் 78 காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களுக்கு மண்டலம் வாரியாக பணியிட... மேலும் பார்க்க