செய்திகள் :

தனியாா் பேருந்து மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் தந்தை, மகன் படுகாயம்

post image

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே தாதம்பட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் தனது மகனுக்கு இடம்கிடைத்துள்ள பொறியியல் கல்லூரியைப் பாா்ப்பதற்காக மகனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஓமலூா் அருகே பூசாரிப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

அவா்களின் பின்னால் தருமபுரி நோக்கி வேகமாக வந்த தனியாா் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி தூக்கி வீசியது. இதில், சாலையில் இழுத்துச் சென்ற இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து ஓமலூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைப்பதற்கு இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து சாம்பலானது. இதில், பலத்த காயமடைந்த தந்தை, மகன் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற தனியாா் பேருந்து குறித்து ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேவூா் அருகே சிறுமி காணாமல் போன வழக்கில் தாத்தா உள்பட 2 போ் கைது

சேலம் மாவட்டம், தேவூா் அருகே நான்கு வயது சிறுமி காணாமல் போனதற்கு காரணமான அவரது தாத்தா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி பாா்வையாளா்கள் 8,930 போ் வந்து சென்றனா். வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்... மேலும் பார்க்க

காதலா்களை கரம்பிடிக்க தில்லியிலிருந்து ஓமலூா் வந்த சகோதரிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி காவல் சரகத்துக்கு உள்பட்ட பண்ணப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆனந்த் - கலா தம்பதி . இவா்களது உறவினா் கோவிந்த் சிறு வயதிலிருந்து தில்லியில் குடும்பத்து... மேலும் பார்க்க

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க