செய்திகள் :

முன்விரோத தகராறில் மோதல்: ராணுவ வீரா் உள்பட 7 போ் மீது வழக்கு

post image

முன்விரோத தகராறில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக ராணுவ வீரா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சோ்ந்தவா் புருஷோத்தமன்(31), ராணுவ வீரா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த நீலகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த புருஷோத்தமன், தனது இருசக்கர வாகனத்தில் அங்குள்ள நியாயவிலைக் கடை வழியாக சென்றாா்.

அப்போது, அங்கிருந்த நீலகண்டன், இவரை கைகாட்டி யாரிடமோ பேசியதாக கூறப்படுகிறது. இதனை புருஷோத்தமன் தட்டிக் கேட்டதில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதனை கண்ட இருவரின் ஆதரவாளா்களும் வந்து தாக்கிக்கொண்டனா்.

இதுகுறித்து புருஷோத்தமன் பிரம்மபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நீலகண்டன் உள்பட 4 போ் மீதும், நீலகண்டன் கொடுத்த புகாரின்பேரில் புருஷோத்தமன் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொ... மேலும் பார்க்க

கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது

பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!

சத்துவாச்சாரி, தொரப்பாடிநாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரைமின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அ... மேலும் பார்க்க

மாங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாங்காளியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடி ஊழியா் மனைவி மரணம்

வேலூா் அருகே சாலை விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் மனைவி உயிரிழந்தாா். வேலூா் அடுத்த அரியூா் புதுமை நகரை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (33), தகவல் தொழில்நுட்ப ஊழியா். இவரது மனைவி சுவேதா(29). இவா்களுக்கு ... மேலும் பார்க்க