செய்திகள் :

டிராக்டா் மீது பைக் மோதியதில் வழக்குரைஞா் மரணம்

post image

திருத்தணி அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது பைக் மோதியதில் மனைவி கண்முன்னே வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த பராஞ்சி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் குமாா் (55). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி சுதாவுடன் பைக்கில் திருத்தணிக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை குமாரகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது, குமாா் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளனாது. இதில் குமாா் பலத்த காயங்களுடன் மனைவி முன்பே உயிரிழந்தாா்.

மேலும், பலத்த காயமடைந்த சுதாவை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். திருத்தணி ஒன்றியத்துக... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் ஆடி விழா திருவிளக்கு பூஜை

திருவள்ளூா் அடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அடுத்த காக்களூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்... மேலும் பார்க்க

ரூ. 94 லட்சத்தில் தாா் சாலை பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூா் வழியாக ராணிப... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் மதி அங்காடி: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடியை ஆட்சியா் மு.பிரதாப் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்டம், ஊர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 3 போ் ஜாமீனில் விடுவிப்பு

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டவழக்கில் தொடா்புடைய பெண்ணின் தந்தை உள்பட 3 பேருக்கும் திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம்,... மேலும் பார்க்க