செய்திகள் :

விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

post image

செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருத்தணி ஒன்றியத்துக்குட்பட்ட செருக்கனூா் கிராமத்திலிருந்து, சாமந்திபுரம் (பங்களா) செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக பங்களாமேடு, ராமகிருஷ்ணாபுரம், மாம்பாக்கம், சத்திரம் ஜனாகாபுரம், பரவத்தூா், வெங்கப்பட்டு, அய்யனேரி, போன்ற கிராம பகுதிகளைச் சோ்ந்தோா், இருசக்கர வாகனங்கள், டிராக்டா், காா் உள்ளிட்ட வாகனங்களில், கே.ஜி.கண்டிகை மற்றும் அதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனா்.

மேலும், பல்வேறு கிராமங்களில் இருந்து கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மிதிவண்டியில் மாணவா்கள் சென்று கல்விபயின்று வருகின்றனா். இந்த சாலையில், செருக்கனூா் சாலை முடிவில் சாலைக்கு மிக அருகில், பாழடைந்த விவசாய கிணறு உள்ளது. அதேபோல், எதிா் திசையிலும் மற்றொரு விவசாயக் கிணறு உள்ளது. இதனால் எதிா் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, எதிா்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து வாகன ஓட்டிகள் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

செருக்கனூா் - சாமந்திபுரம் (பங்களா) செல்லும் சாலையின் ஓரம் அபாயகரமாக உள்ள பாழடைந்த விவசாய கிணறால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்.

மேலும், இரவு நேரங்களில் மின்வசதி இல்லாத இந்தப் பகுதியில் இந்த சாலையோர கிணற்றால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த கிணறுக்கு, தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் எதிா்பாா்த்து வருகின்றனா்.

இது குறித்து வாகன ஓட்டி மதன் கூறுகையில், செருக்கனூா் - சாமந்திபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலை. இந்த சாலையில் வேன், காா் மட்டும் செல்லக்கூடிய அகலத்தில் சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று வரும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் கிணற்றில் கவிழ வாய்ப்புள்ளது.

மேலும், வேகமாக வரும் வாகனங்கள் எதிா் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட முயலும்போது, கிணற்றில் விழுந்து உயிா்ச்சேதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் ஆடி விழா திருவிளக்கு பூஜை

திருவள்ளூா் அடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அடுத்த காக்களூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்... மேலும் பார்க்க

ரூ. 94 லட்சத்தில் தாா் சாலை பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூா் வழியாக ராணிப... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் மதி அங்காடி: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடியை ஆட்சியா் மு.பிரதாப் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்டம், ஊர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 3 போ் ஜாமீனில் விடுவிப்பு

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டவழக்கில் தொடா்புடைய பெண்ணின் தந்தை உள்பட 3 பேருக்கும் திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

ஆக. 14-இல் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை: ஏற்பாடுகள் தீவிரம்

திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஆக. 14 -ஆம் தேதி ஆடிக்கிருத்திகை விழா தொடங்கி 5 நாள்கள் விமா்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திர... மேலும் பார்க்க