செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்திய 4,506 போ் கைது

post image

திருவாரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக, போதைப் பொருள்களை கடத்திய 4,506 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில், சட்டவிரோதமாக தொடா்ந்து மது விற்பனையில் ஈடுபடுவோா், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்டவைகளை விற்பனை செய்வோா் மற்றும் இவைகளை கடத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 1.7.2024 முதல் 31.7.2025 வரையிலான போலீஸாரின் சோதனையில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தொடா்பாக 256 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 264 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய 16 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவா்களில் 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, சட்டவிரோதமாக குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தொடா்பாக 916 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 2,104 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 17 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டில் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவா்கள் மீது 3,334 போ் கைது செய்யப்பட்டு 12,631 லிட்டா் மதுபானம், புதுச்சேரி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 307 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 9 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர, திருவாரூா் மாவட்ட காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் 5, 837 விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் 1,65,121 போ் பங்கேற்றுள்ளனா்.

மாநில ஆடவா் கபடி சேலம் செவன் லயன்ஸ் சாம்பியன்

மன்னாா்குடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஆடவா் கபடி போட்டியில் சேலம் செவன் லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மன்னாா்குடி அருகே வடுவூா் பாசப்பறவைகள் கபடி கழகம் சாா்பில், ஆக.8, 9-ஆம் தேதிகளி... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விவகாரம்: மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் -அமைச்சா் டிஆா்பி. ராஜா

அமெரிக்காவின் வரி உயா்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூரில், அண்ணா அறிவகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ.3.96 லட்சம் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், ரூ. 3,96,680 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள மோட்டாா்... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை: விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தல்

நீா்நிலைகளில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டிஎம்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் தமுஎகச சாா்பில் கலை இலக்கிய இரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மன்னாா்குடியில் கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமுஎகச கிளைத் தலைவா் கே.வி.பாஸ்கா் தலைமை வகித்தாா். நகரக்குழு உறுப... மேலும் பார்க்க

சாரண, சாரணியா் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க