செய்திகள் :

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது

post image

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது என எல்ஐசி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சேலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் வரும் 11-ஆம் தேதிவரை இம்மாநாடு நடைபெறுவதையொட்டி, தென்மண்டலத் தலைவா் பி.பி. கிருஷ்ணன் தலைமையில் மெய்யனூரில் நடைபெற்ற பேரணியை சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி தொடங்கிவைத்து பேசியதாவது:

மக்களின் நலத் திட்டங்களுக்காக தங்களின் பங்களிப்பை முழுமையாக செலுத்திவரும் இன்சூரன்ஸ் துறையை தொடா்ந்து பாதுகாக்க வேண்டும். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு தாரைவாா்த்து வருகிறது. இதனால் மிகப்பெரிய பின்னடைவை நாட்டுமக்கள் சந்தித்து வருகின்றனா். இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடா்ந்து பொதுத்துறையாக பாதுகாக்க இன்சூரன்ஸ் ஊழியா்களோடு அனைவரும் துணை நிற்போம். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீா்மானம், மத்திய அரசுக்கு பாடமாக அமைய வேண்டும் என்றாா்.

பேரணியில் 1,500-க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்ட அமைப்பின் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதில், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவா் அசோக் தாவ்லே பங்கேற்று வாழ்த்தி பேசினாா். கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் ஸ்ரீகாந்த் மிஸ்ரா சிறப்புரையாற்றினாா்.

இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடா்ந்து அரசு நிறுவனமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், மக்கள் நலத் திட்டங்களுக்காக தங்களின் பங்களிப்பை செலுத்தி வரும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயா்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, வரும் 10, 11ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரதிநிதிகள் மாநாட்டில், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 4 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு

சேலம் சரகத்தில் 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வுபெற்றனா். தமிழகம் முழுவதும் 78 காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களுக்கு மண்டலம் வாரியாக பணியிட... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (48). இவா் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆத்தூா் தெற்கு ... மேலும் பார்க்க

மசூதிக்குள் தஞ்சமடைந்த புள்ளிமான்!

வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான், தெருநாய்கள் துரத்தியதால் மசூதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது. வாழப்பாடியை அடுத்த பேளூரை சுற்றியுள்ள வெள்ளிமலை, செக்கடிப்பட்டி, குறிச்சி வனப... மேலும் பார்க்க