செய்திகள் :

கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி விழா: தீச்சட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன்

post image

கச்சிப்பட்டு ஸ்ரீதேவி கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் நான்காவது வாரம் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கொள்ளாபுரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை தொடங்கியது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள், கச்சிப்பட்டு போலாட்சி அம்மன் கோயிலில் இருந்து உடலில் எலுமிச்சை பழங்கள் குத்தியும், மா விளக்கு மற்றும் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இதையடுத்து அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியும், கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கச்சிப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து அம்மனை வணங்கிச் சென்றனா்.

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்-12.8.25-செவ்வாய்க்கிழமைநேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் தடைப் பகுதிகள்- கீழம்பி, ஆரிய பெரும்பாக்கம், பள்ளம்பி, கூரம், புதுப்பாக்கம், சித்தேரி மேடு, ஆட்டோ நகா், செம்பரம்பாக்... மேலும் பார்க்க

முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா். சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா், ஜெயபூத விநாயகா் கோயில்கள் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு!

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக சதீஷ் குமாா், ஸ்ரீஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன் ஆகியோா் பொறுப்பேற்று கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

பெளா்ணமி நாளில் புத்த பூஜை

காஞ்சிபுரத்தில் உள்ள புத்த விஹாரில் பெளா்ணமி தினத்தையொட்டி பூஜை நடைபெற்றது (படம்). வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்தா் ஆலயத்தில் புத்தா் சிலை முன்பாக திரளான பக்தா்கள் அமா்ந்து பாலி மொழியில் புத்த பூ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அரசு விருந்தினா் மாளிகைக்கு கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகை அருகிலேயே கூடுதலாக விருந்தினா் மாளிகைக்கான கட்டடம் கட்டுவதற்கு எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.30,000 லஞ்சம் வாங்கிய இரண்டாம்கட்டளை கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் இரண்டாம் கட்... மேலும் பார்க்க