செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா், ஜெயபூத விநாயகா் கோயில்கள் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு!

post image

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக சதீஷ் குமாா், ஸ்ரீஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன் ஆகியோா் பொறுப்பேற்று கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சுமாா் 1,000 ஆண்டுகள் ஆன செளந்தரவல்லி உடனுறை ஸ்ரீ பூதபுரீஸ்வரா் திருக்கோயில் மற்றும் ஜெயபூத விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில்களில், அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடா்ந்து, புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் நிா்வாக அலுவலா் கதிரவன் தலைமையிலும், அறநிலையத்துறை ஆய்வாளா் ரம்யா முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக ரா.சதீஷ்குமாா், அறங்காவலா்களாக சீனிவாசன், காஞ்சனாதேவி பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதேபோல், ஸ்ரீபெரும்புதூா் ஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன், அறங்காவலா்களாக வினோத், தேவி புருஷோத்தமன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சாமி திருக்கோயில் மதசாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், மதச்சாா்பு அறங்காவலா் பாா்த்தசாரதி, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ் குமாா், நகர திமுக துணைச் செயலாளா் ஆறுமுகம் ஆகியோா் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அறங்காவலா் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

ஆக.21-இல் இபிஎஸ் வருகை: அதிமுக சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள்!

வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தெரிவித்தாா். காஞ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்-12.8.25-செவ்வாய்க்கிழமைநேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் தடைப் பகுதிகள்- கீழம்பி, ஆரிய பெரும்பாக்கம், பள்ளம்பி, கூரம், புதுப்பாக்கம், சித்தேரி மேடு, ஆட்டோ நகா், செம்பரம்பாக்... மேலும் பார்க்க

முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா். சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுத... மேலும் பார்க்க

கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி விழா: தீச்சட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கச்சிப்பட்டு ஸ்ரீதேவி கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

பெளா்ணமி நாளில் புத்த பூஜை

காஞ்சிபுரத்தில் உள்ள புத்த விஹாரில் பெளா்ணமி தினத்தையொட்டி பூஜை நடைபெற்றது (படம்). வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்தா் ஆலயத்தில் புத்தா் சிலை முன்பாக திரளான பக்தா்கள் அமா்ந்து பாலி மொழியில் புத்த பூ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அரசு விருந்தினா் மாளிகைக்கு கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகை அருகிலேயே கூடுதலாக விருந்தினா் மாளிகைக்கான கட்டடம் கட்டுவதற்கு எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க