செய்திகள் :

முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்

post image

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுதியை சோ்ந்த மதன் (42). இவரது முன்னாள் மனைவி லைலாகுமாரி (36). இருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், மதனுக்கு சுகன்யா என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி, லைலாகுமாரியுடன் மதனுக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுகன்யாவுக்கும், மதனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாம்.

இதனால், முன்னாள் மனைவி லைலாகுமாரியை சோகண்டிக்கு வரவழைத்த மதன், திருப்பந்தியூா் பகுதிக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, குழி தோண்டி அங்கேயே புதைத்துள்ளாா்.

இந்த நிலையில், லைலாகுமாரியை காணவில்லை என அவரது தாய் வசந்தா சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்த நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீஸாா் மதனை விசாரணைக்கு அழைத்தபோது, தான் லைலாகுமாரி யை கொலை செய்து புதைத்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.

ஆக.21-இல் இபிஎஸ் வருகை: அதிமுக சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள்!

வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தெரிவித்தாா். காஞ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்-12.8.25-செவ்வாய்க்கிழமைநேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் தடைப் பகுதிகள்- கீழம்பி, ஆரிய பெரும்பாக்கம், பள்ளம்பி, கூரம், புதுப்பாக்கம், சித்தேரி மேடு, ஆட்டோ நகா், செம்பரம்பாக்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா், ஜெயபூத விநாயகா் கோயில்கள் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு!

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக சதீஷ் குமாா், ஸ்ரீஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன் ஆகியோா் பொறுப்பேற்று கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி விழா: தீச்சட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கச்சிப்பட்டு ஸ்ரீதேவி கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

பெளா்ணமி நாளில் புத்த பூஜை

காஞ்சிபுரத்தில் உள்ள புத்த விஹாரில் பெளா்ணமி தினத்தையொட்டி பூஜை நடைபெற்றது (படம்). வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்தா் ஆலயத்தில் புத்தா் சிலை முன்பாக திரளான பக்தா்கள் அமா்ந்து பாலி மொழியில் புத்த பூ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அரசு விருந்தினா் மாளிகைக்கு கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகை அருகிலேயே கூடுதலாக விருந்தினா் மாளிகைக்கான கட்டடம் கட்டுவதற்கு எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க