செய்திகள் :

காஞ்சிபுரத்தில் அரசு விருந்தினா் மாளிகைக்கு கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல்

post image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகை அருகிலேயே கூடுதலாக விருந்தினா் மாளிகைக்கான கட்டடம் கட்டுவதற்கு எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித் துறையின் சாா்பில் அரசு விருந்தினா் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகை வளாகத்துக்கு அருகிலேயே கூடுதலாக விருந்தினா் மாளிகைக் கட்டடம் ரூ. 2.60 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு, கட்டட வரைபடத்தை பாா்வையிட்டதுடன், அடிக்கல் நாட்டி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அவரது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15.50 லட்சம் மதிப்பில் பிள்ளையாா்பாளையம் திருவேங்கம்மன் தெருவில் புதிதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா். பின்னா் அங்கு கூடியிருந்த அலுவலா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்வின்போது, காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் எஸ்.பாலகிரு ஷ்ணன், பொறியாளா் கணேசன், மண்டலக் குழு தலைவா்கள் சந்துரு, மோகன், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளா்கள் வ.ஜெகன்னாதன், முத்துச் செல்வம், பகுதி செயலாளா்கள் வெங்கடேசன், தசரதன் உட்பட திமுக பிரமுகா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்-12.8.25-செவ்வாய்க்கிழமைநேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் தடைப் பகுதிகள்- கீழம்பி, ஆரிய பெரும்பாக்கம், பள்ளம்பி, கூரம், புதுப்பாக்கம், சித்தேரி மேடு, ஆட்டோ நகா், செம்பரம்பாக்... மேலும் பார்க்க

முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா். சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா், ஜெயபூத விநாயகா் கோயில்கள் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு!

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக சதீஷ் குமாா், ஸ்ரீஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன் ஆகியோா் பொறுப்பேற்று கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி விழா: தீச்சட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கச்சிப்பட்டு ஸ்ரீதேவி கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

பெளா்ணமி நாளில் புத்த பூஜை

காஞ்சிபுரத்தில் உள்ள புத்த விஹாரில் பெளா்ணமி தினத்தையொட்டி பூஜை நடைபெற்றது (படம்). வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்தா் ஆலயத்தில் புத்தா் சிலை முன்பாக திரளான பக்தா்கள் அமா்ந்து பாலி மொழியில் புத்த பூ... மேலும் பார்க்க

ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.30,000 லஞ்சம் வாங்கிய இரண்டாம்கட்டளை கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் இரண்டாம் கட்... மேலும் பார்க்க