செய்திகள் :

இளைஞா் காங்கிரஸாா் போராட்டம்: 35 போ் கைது

post image

மாநிலங்களில் போலி வாக்காளா்கள் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸைச் சோ்ந்த 30 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

பல்வேறு மாநிலங்களில் வாக்காளா்கள் போலியாக பதிவு செய்துள்ளதாக மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியிருந்தாா். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி காங்கிரஸ் கட்சி தலைமையகமான அருணாச்சலம் மன்றம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.பி. சூா்யா பிரகாஷ் தலைமை வகித்தாா்.

இதில், அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் செயலாளா் சஹரிக்க ராவ் முன்னிலையில் பொதுசெயலாளா்கள் சரவணன் சுபசோமு, விஜய் பட்டேல், திருச்சி மாநகா் மாவட்ட தலைவா் ரகுநாதன், திரளான இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும், போலி வாக்காளா்களை நீக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.

தொடா்ந்து அவா்கள் மெயின்காா்டுகேட் பகுதியில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 35 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

சுதந்திர தின ஓவியப் போட்டி

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (ப... மேலும் பார்க்க

மருங்காபுரி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி குறுவட்ட அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் (ஆக.8) நிறைவடைந்தன. 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருங்காபுரி குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ ம... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. திருச்சியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் வானம் மேக மூட்டத்துடனும் ஆங்காங்கே மழையும் பெய்துவந்தது. இதன... மேலும் பார்க்க

பச்சைமலை மங்களம் அருவியில் பொதுமக்கள் நீராடல்

துறையூா் பகுதிக்குள்பட்ட பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். பச்சமலை உள்பட துறையூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்... மேலும் பார்க்க

லால்குடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவியை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திருச்சி மாவ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க