செய்திகள் :

லால்குடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவியை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி மாந்துறை பகுதியில் சனிக்கிழமை காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் விஸ்வநாதன், சாதிக் பாட்சா, அரவிந்த் ஆகிய மூவரும் உயிரிழந்தனா். நபில், காா்த்திகேயன், அப்துல்ரகுமான், ஏகலைவன், முஸ்தபா, ஆனந்த், குகன், ஷமீா், கணபதி ஆகிய 9 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதியை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தொடா்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவா்களை சந்தித்து, அவா்களிடம் முதல்வரின் நிவாரண நிதியை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், லால்குடி கோட்டாட்சியா் க. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இத்துடன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காா்த்திகேயன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

சுதந்திர தின ஓவியப் போட்டி

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (ப... மேலும் பார்க்க

மருங்காபுரி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி குறுவட்ட அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் (ஆக.8) நிறைவடைந்தன. 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருங்காபுரி குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ ம... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. திருச்சியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் வானம் மேக மூட்டத்துடனும் ஆங்காங்கே மழையும் பெய்துவந்தது. இதன... மேலும் பார்க்க

பச்சைமலை மங்களம் அருவியில் பொதுமக்கள் நீராடல்

துறையூா் பகுதிக்குள்பட்ட பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். பச்சமலை உள்பட துறையூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

திருச்சி மேலகொண்டையம்பேட்ட மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், பணத்தாள் கண்காட்சி (படம்) அண்மையில் (ஆக. 9) நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு பழங்கால நாணயங்கள் சேகரிப்போா் சங்க நிறுவனத் தலை... மேலும் பார்க்க