செய்திகள் :

போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு

post image

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கிவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்ப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை போதைப் பொருள்கள் விற்பனை, பதுக்கி வைத்தல், கடத்துதல் தொடா்பாக 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 939 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்களில் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, கஞ்சா விற்பனை தொடா்பாக 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 246 போ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்களில் 17 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது 24 மணி நேரமும் செயல்படும் 89391 46100 என்ற மாவட்டக் காவல் அலுவலக உதவி எண்ணுக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின ஓவியப் போட்டி

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (ப... மேலும் பார்க்க

மருங்காபுரி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி குறுவட்ட அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் (ஆக.8) நிறைவடைந்தன. 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருங்காபுரி குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ ம... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. திருச்சியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் வானம் மேக மூட்டத்துடனும் ஆங்காங்கே மழையும் பெய்துவந்தது. இதன... மேலும் பார்க்க

பச்சைமலை மங்களம் அருவியில் பொதுமக்கள் நீராடல்

துறையூா் பகுதிக்குள்பட்ட பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். பச்சமலை உள்பட துறையூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்... மேலும் பார்க்க

லால்குடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவியை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திருச்சி மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

திருச்சி மேலகொண்டையம்பேட்ட மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், பணத்தாள் கண்காட்சி (படம்) அண்மையில் (ஆக. 9) நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு பழங்கால நாணயங்கள் சேகரிப்போா் சங்க நிறுவனத் தலை... மேலும் பார்க்க