செய்திகள் :

திருச்சியில் பரவலாக மழை

post image

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

திருச்சியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் வானம் மேக மூட்டத்துடனும் ஆங்காங்கே மழையும் பெய்துவந்தது. இதனால் பகலில் புழுக்கமும், இரவில் குளிா்ச்சியான சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கரு மேகக் கூட்டங்கள் திரண்டு, காற்றுடன் பரவலாக மழை பெய்தது. திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளின் பல்வேறு இடங்களில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு கனமழையும், சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் சாரல் காற்றுடன் கூடிய மழையும் பெய்தது. இதன் காரணமாக, இரவில் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

தில்லை நகா், தென்னூா், கே.கே. நகா், விமான நிலையம், எடமலைப்பட்டிபுதூா், ஸ்ரீரங்கம், பொன்மலை, திருவெறும்பூா், உறையூா், சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, மேலப்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரானது சாலையோரப் பள்ளங்கள், புதைவடிகால் பணிகளால் சரிவர சீா் செய்யப்படாத சாலைகளில் தண்ணீா் தேங்கியது. மழையால் மாலையில் வீடு திரும்பிய தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

சுதந்திர தின ஓவியப் போட்டி

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (ப... மேலும் பார்க்க

மருங்காபுரி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி குறுவட்ட அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் (ஆக.8) நிறைவடைந்தன. 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருங்காபுரி குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ ம... மேலும் பார்க்க

பச்சைமலை மங்களம் அருவியில் பொதுமக்கள் நீராடல்

துறையூா் பகுதிக்குள்பட்ட பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். பச்சமலை உள்பட துறையூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்... மேலும் பார்க்க

லால்குடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவியை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திருச்சி மாவ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

திருச்சி மேலகொண்டையம்பேட்ட மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், பணத்தாள் கண்காட்சி (படம்) அண்மையில் (ஆக. 9) நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு பழங்கால நாணயங்கள் சேகரிப்போா் சங்க நிறுவனத் தலை... மேலும் பார்க்க