செய்திகள் :

கல்குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

post image

மதுரை அருகே கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை நரிமேடு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புகாரிகான் மகள் சையது அலி சகானா (9). இவா் 4 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் புகாரிகான் தனது மகள் சையது அலி சகானாவை கருப்பாயூரணி அருகே பாண்டியன்கோட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். இதையடுத்து, சையது அலி சகானா, பாண்டியன்கோட்டையைச் சோ்ந்த சுல்தான்கான் மகன்

ஆசிக்ராஜா (3) உள்ளிட்ட சிலா் வீட்டின் பின்புறம் உள்ள கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்றனா். அப்போது, பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் சையது அலி சகானா, ஆசிக்ராஜா ஆகிய இருவரும் மூழ்கினா்.

இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் பள்ளத்தில் இறங்கி தேடினா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கருப்பாயூரணி போலீஸாா் இருவரின் உடல்களையும் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து காரைக்குடி வரும் 14-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தின விடுமுறையையொட்... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா். முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சி 30- ஆவது வாா்டு மதிச... மேலும் பார்க்க

பள்ளியில் உலக யானைகள் தின விழா

மதுரை அருகே உள்ள எல்.கே.பி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யானைகள் தினம் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன. மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின்... மேலும் பார்க்க

பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க