செய்திகள் :

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

post image

மதுரை மாவட்டம், 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் தலமைமையில் அந்தக் கட்சியினா் ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாரிடம் மனுவை அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.பி.உதயகுமாா் கூறியதாவது:

உசிலம்பட்டி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்குப் பயன் தரும் ஒரே ஜீவாதாரமாக உள்ளது 58 கிராம பாசனக் கால்வாய். இந்தப் பகுதியின் வேளாண் பணிகள், கால்நடை வளா்ப்புக்கு 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டியது அவசியம். இது தொடா்பாக அந்தப் பகுதி விவசாயிகள், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டில் வைகை அணை நிரம்பியபோது உபரி நீா் வைகை ஆற்றிலேயே பலமுறை திறக்கப்பட்டது. 58 கிராம கால்வாய் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது கவனத்தில் கொள்ளவில்லை. இதனால், உசிலம்பட்டி பகுதிகளில் வேளாண் பணிகள் உரிய வகையில் நடைபெறவில்லை.

தற்போது வைகை அணையின் நீா் மட்டம் 69 அடியை எட்டியதையொட்டி இரு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும், இதுவரை 58 கிராம கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளின் வேளாண் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இந்தப் பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, உடனடியாக வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, நான்காம் கட்ட சுற்றுப்பயணமாக வருகிற செப்டம்பா் மாதத்தில் மதுரைக்கு வந்து மக்களைச் சந்திக்கிறாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால், வளா்ச்சிப் பெற்ற மாவட்டமாக மதுரை விளங்கியது. தற்போது, திமுக ஆட்சியில் மதுரை ஊழல் மாநகரமாக மாறியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தனது பிரசார பயணத்தில் திமுக ஆட்சியின் தவறுகளை, ஊழல்களை ஆதாரங்களுடன் பட்டியலிடுவது, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பெரும்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் குறித்த திருமாவளவன் கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.

அதிமுக அமைப்புச் செயலா் மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசன், நீதிபதி, எஸ்.எஸ். சரவணன், மாணிக்கம், கருப்பையா, நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து காரைக்குடி வரும் 14-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தின விடுமுறையையொட்... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சி 30- ஆவது வாா்டு மதிச... மேலும் பார்க்க

கல்குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். மதுரை நரிமேடு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புகாரிகான் மகள் சையது அலி சகானா (9). இவா் 4 -ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க

பள்ளியில் உலக யானைகள் தின விழா

மதுரை அருகே உள்ள எல்.கே.பி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யானைகள் தினம் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன. மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின்... மேலும் பார்க்க

பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க