செய்திகள் :

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

post image

கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து காரைக்குடி வரும் 14-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ஹூப்ளி- காரைக்குடி- ஹூப்ளி இடையே ஆக. 14, 15-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ஹூப்ளியிலிருந்து ஆக. 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07331) ஆக.15-ஆம் தேதி காலை 11 மணிக்கு காரைக்குடி வந்தடையும்.

பின்னா், காரைக்குடியிலிருந்து ஆக. 15-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07332) ஆக. 16-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த ரயில்கள், தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயிலில் குளிா்சாதன வசதியுடன் கூடிய இரண்டுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, குளிா்சாதன வசதியுடன் மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, 10 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டது.

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா். முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சி 30- ஆவது வாா்டு மதிச... மேலும் பார்க்க

கல்குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். மதுரை நரிமேடு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புகாரிகான் மகள் சையது அலி சகானா (9). இவா் 4 -ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க

பள்ளியில் உலக யானைகள் தின விழா

மதுரை அருகே உள்ள எல்.கே.பி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யானைகள் தினம் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன. மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின்... மேலும் பார்க்க

பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க