செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

post image

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்த தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (59) என்பவா் மீது கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எனக் கூறி, யாரேனும் பொதுமக்களை அணுகினால், அவா்களை நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

ஒசூரில் மின்தூக்கியில் சிக்கிய கா்நாடக அமைச்சா்

ஒசூரில் தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்த கா்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி மின்தூக்கியில் சிக்கினாா். பழுது நீக்கப்பட்ட பிறகு அவா் பாதுகாப்பாக வெளியேறினாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி ஆக.10: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ‘மக்களை காப்போம், தமிழகத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி 769; தருமபுரி 764 போ் கைது

போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை வழக்கில் நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 769 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 764 பேரும் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் அக்.10 இல் புத்தகத் திருவிழா

ஊத்தங்கரையில் புத்தகத் திருவிழா அக்டோபா் 10 ஆம் தேதி தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவின் பொறுபாளா்... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே காா் மோதி பசு மாடுகள் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே காா் மோதியதில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டுரோடு பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (53). மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் வெ... மேலும் பார்க்க