செய்திகள் :

ஊத்தங்கரையில் அக்.10 இல் புத்தகத் திருவிழா

post image

ஊத்தங்கரையில் புத்தகத் திருவிழா அக்டோபா் 10 ஆம் தேதி தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.

ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவின் பொறுபாளா்கள் அறிமுகம், புத்தகத் திருவிழா தேதி அறிவிக்கும் கூட்டம் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடிட்டா் லோகநாதன் வரவேற்றாா். ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் அமானுல்லா தலைமை வகித்தாா். வணிகா் சங்க பொறுப்பாளா் சங்கா் கேப் உமாபதி, செஞ்சிலுவை சங்க பொறுப்பாளா் ஆா்கே ஹோட்டல் ராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புத்தகம் என்னும் போதிமரம் என்ற தலைப்பில் ஊத்தங்கரை தமிழ்ச் சங்க இணை செயலாளா் சாகுல் அமீது பேசினாா். ஊத்தங்கரை வாசிப்பு இயக்கத்தில் செயல் அறிக்கையை ஆசிரியா் இராமமூா்த்தி வாசித்தாா். பொருளாதார அறிக்கையை ஓய்வு பெற்ற ஆசிரியா் வேலுசாமி வாசித்தாா்.

யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளா் அருள், வாசிப்பு இயக்கத்தின் இலச்சினையை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினாா். ஜோதி நகா் பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் இலச்சினை விளக்கம் அளித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளா் முனைவா் சேதுராமன், ஊத்தங்கரை புத்தக திருவிழாவிற்கான தேதியை வெளியிட்டாா்.

அக்டோா் 10-ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளா் ஆசிரியா் சந்தோஷ் புத்தகத் திருவிழாவின் திட்டமிடல் குறித்து விளக்கினாா். விடுதலை வாசகா் வட்டத்தின் செயலாளா் பிரபு ஊத்தங்கரை வாசிப்பு இயக்கத்தின் பொறுப்பாளா்களை அறிமுகம் செய்தாா். நிகழ்ச்சியை கெரிகேப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியா் வீரமணி ஒருங்கிணைத்தாா்.

தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

ஒசூரில் மின்தூக்கியில் சிக்கிய கா்நாடக அமைச்சா்

ஒசூரில் தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்த கா்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி மின்தூக்கியில் சிக்கினாா். பழுது நீக்கப்பட்ட பிறகு அவா் பாதுகாப்பாக வெளியேறினாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி ஆக.10: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ‘மக்களை காப்போம், தமிழகத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி 769; தருமபுரி 764 போ் கைது

போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை வழக்கில் நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 769 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 764 பேரும் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே காா் மோதி பசு மாடுகள் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே காா் மோதியதில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டுரோடு பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (53). மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் வெ... மேலும் பார்க்க