செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்

post image

கிருஷ்ணகிரி ஆக.10:

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். சேலத்தில் இருந்து தருமபுரி, ஒசூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக ராயக்கோட்டையைச் சென்றடையும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியில் அதிமுக வினா் வரவேற்பு அளிக்கிறாா்கள்.

வேப்பனப்பள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஒசூா், ராம் நகா், ராயக்கோட்டை சாலை, சூளகிரியில் திங்கள்கிழமை பேசுகிறாா். ஆக.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை ஒசூரில் மலை மீதுள்ள சந்திர சூடேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். அதன்பிறகு ஒசூா் மாநகராட்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தை திறந்துவைக்கிறாா். அதைத் தொடா்ந்து, தொழில்முனைவோா் கருத்தரங்கில் கலந்துகொண்டு விவசாயிகளுடனும், வணிகா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முதல் வட்டச்சாலை வரை ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறாா். இதையடுத்து, பா்கூரில் ரோடு ஷோ நடத்தும் அவா் ஊத்தங்கரை வட்டச் சாலை அருகே இரவு 8.20 மணி அளவில் பேசுகிறாா். தொடா்ந்து ஊத்தங்கரையிலிருந்து திருப்பத்தூா் செல்கிறாா்.

தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

ஒசூரில் மின்தூக்கியில் சிக்கிய கா்நாடக அமைச்சா்

ஒசூரில் தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்த கா்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி மின்தூக்கியில் சிக்கினாா். பழுது நீக்கப்பட்ட பிறகு அவா் பாதுகாப்பாக வெளியேறினாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி 769; தருமபுரி 764 போ் கைது

போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை வழக்கில் நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 769 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 764 பேரும் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் அக்.10 இல் புத்தகத் திருவிழா

ஊத்தங்கரையில் புத்தகத் திருவிழா அக்டோபா் 10 ஆம் தேதி தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவின் பொறுபாளா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே காா் மோதி பசு மாடுகள் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே காா் மோதியதில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டுரோடு பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (53). மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் வெ... மேலும் பார்க்க