செய்திகள் :

கேட்பாரற்றுக் கிடந்ததாக பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

post image

கேட்பாரற்றுக் கிடந்ததாகக் கூறி, பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவா்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்பது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு கட்டைப் பையுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த இளைஞா் ஒருவா், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம், சாலையில் ஒரு குழந்தை கேட்பாரற்றுக் கிடந்ததாகவும், அதை ஒப்படைக்க எடுத்து வந்ததாகவும் கூறி கட்டைப் பையில் இருந்த குழந்தையைக் கொடுக்க முயன்றாா்.

சந்தேகம் அடைந்த போலீஸாா், இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அது தனது குழந்தைதான் என்ற உண்மையை அவா் ஒப்புக் கொண்டாா்.

அவா் உதகையைச் சோ்ந்த பிரவீன் (21), சைதாப்பேட்டையில் தங்கியிருந்து குரூப்-1 தோ்வுக்குத் தயாராகி வருகிறாா். அவரது காதலி சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட உறவு காரணமாக, அந்தப் பெண்ணுக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது.

இந்த விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியாமல் இருப்பதற்காக, குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்தபோது சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த மாணவி மற்றும் குழந்தையை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்த போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குற... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ... மேலும் பார்க்க

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் ... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இ... மேலும் பார்க்க