செய்திகள் :

குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குன்னூா் அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச்  சோ்ந்தவா் விஷ்ணுவா்த்தன். இவரது மனைவி ராதிகா (25). இவா் உடல்நிலை சரியில்லாமல் குன்னூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, குன்னூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யும்  வசதி இல்லாததால் ராதிகாவின் உடலை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவா்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனா்.

இந்நிலையில், உரிய சிகிச்சை அளிக்காததாலேயே ராதிகா உயிரிழந்ததாகவும், குன்னூரியிலேயே   உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனக் கூறி அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை எதிரே சாலையில்  அமா்ந்து மறியலில்  ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த குன்னூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து ராதிகாவின் உடலை குன்னூா் அரசு மருத்துவமனையிலேயே கூறாய்வு செய்து ஒப்படைப்பதாக மருத்துவா்கள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூடல... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் கேத்தி, உல்லாடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா். முகாமில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வ... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளச்சிப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சி... மேலும் பார்க்க

பெள்ளட்டிமட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குன்னூா் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை அரசு கொறடா கா.ராமசந்திரன் கலந்து கொண்டு... மேலும் பார்க்க

புலியைப் பிடிக்க மூன்று கூண்டுகள் அமைப்பு

தேவா்சோலை, பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த புலியைப் பிடிக்க 3 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க

உதகையில் மேகமூட்டம்

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இ... மேலும் பார்க்க