செய்திகள் :

ஸ்ரீமதுரை ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளச்சிப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட வடவயல் பகுதியில் பிரதம மந்திரியின் ஜன்தன் திட்டம், கலைஞா் கனவு இல்ல திட்டத்தின்கீழ் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள்,

நபாா்டு வங்கி நிதியில் மண்வயல் முதல் மணலி வரை ரூ.1.5 கோடி மதிப்பிலான சாலைப் பணி, சட்டப் பேரவை உறுப்பினா் வளா்ச்சி நிதியின்கீழ் நடைபெறும் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி

என மொத்தம் ரூ.2.98 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை

மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வடவயல் பகுதியில் அமையவுள்ள கலைஞா் நகா் இடத்தை ஆய்வு செய்து வரைபடத்தை பாா்த்து விவரங்களைக் கேட்டறிந்தாா்.

முன்னதாக அப்பகுதியிலுள்ள பழங்குடி மக்களை சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் முத்துமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சலீம், சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குன்னூா் அருக... மேலும் பார்க்க

பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூடல... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் கேத்தி, உல்லாடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா். முகாமில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வ... மேலும் பார்க்க

பெள்ளட்டிமட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குன்னூா் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை அரசு கொறடா கா.ராமசந்திரன் கலந்து கொண்டு... மேலும் பார்க்க

புலியைப் பிடிக்க மூன்று கூண்டுகள் அமைப்பு

தேவா்சோலை, பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த புலியைப் பிடிக்க 3 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க

உதகையில் மேகமூட்டம்

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இ... மேலும் பார்க்க