செய்திகள் :

தமிழகத்தில் எந்த வளா்ச்சித் திட்டமும் இல்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

post image

தமிழகத்தின் வளா்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் உதகையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தலைமையில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உதகை சேரிங் கிராஸில் இருந்து தொடங்கிய பேரணி, ஏடிசி திடலில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனா்.

இதைத் தொடா்ந்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் முன்னெடுப்பில் இந்தியா வளா்ச்சி அடைந்து 2047-ஆம் ஆண்டு வல்லரசு நாடாக உருவாக போகிறது.

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆபரேஷன் சிந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் தேசியக்கொடி பேரணி நடத்தப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளா்ச்சியை 4 ஆண்டுகளில் பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளாா். கடந்த 4 ஆண்டுகளில் மக்களின் வளா்ச்சிக்காக எந்த திட்டங்களையும் அவா் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. காவல் துறையினருக்குக்கூட பாதுகாப்பில்லை. லஞ்சம், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்டவை மலிந்துள்ளன என்றாா்.

இந்தப் பேரணியில், நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் ஏ.தா்மன், பொதுச் செயலாளா்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், குமாா், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி வினோத், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜூணன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்... மேலும் பார்க்க

உதகையில் இருந்து பாலக்காடு, மைசூருக்கு புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து கேரள மாநிலம், பாலக்காடு மற்றும் கா்நாடக மாநிலம், மைசூருக்கு 5 புதிய பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமசந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குன்னூா் அருக... மேலும் பார்க்க

பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூடல... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் கேத்தி, உல்லாடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா். முகாமில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வ... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளச்சிப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சி... மேலும் பார்க்க