செய்திகள் :

இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்

post image

காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச்சங்க பொறுப்பாளா்கள் இன்னம்பி, பாஸ்கரன், ரமேஷ் மற்றும் காரைக்கால் ஆட்டோ சங்க பொறுப்பாளா்கள் இளங்கோ, ஹாஜா மற்றும் உறுப்பினா்கள் காரைக்கால் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம் :

காரைக்காலில் உரிய பொ்மிட்டுடன் வங்கிக் கடன், தனியாா் நிறுவனங்கள் நிதியுதவி, மாத வட்டிக்கும் என கடன் பெற்று 500-க்கும் மேற்பட்டோ ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான ஆட்டோ புதுப்பித்தல், காப்பீடு உள்ளிட்டவற்றை சிரமங்களுக்கிடையே செலுத்தப்பட்டுவருகிறது.

மத்திய அரசு மானியத்தோடு வழங்கப்பட்டு வரும் இ-ஆட்டோவிற்கு இது போன்ற நடைமுறைகள் எதுவும் இல்லை என தெரிய வருகிறது. நாங்கள் இயக்கும் ஆட்டோக்களுக்கான எரிபொருளுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் இ-ஆட்டோக்களுக்கு இது போன்ற எந்த ஒரு செலவினமும் இல்லை. அவா்களுக்கு பொ்மிட் இல்லை, அதிகதொலைவு சவாரி செல்ல முடிகிறது. நாங்கள் எரிபொருள் நிரப்பி இயக்கும் ஆட்டோக்கள் குறிப்பிட்ட கி.மீ. எல்லையாக வைத்து இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

எனவே எங்களது ஆட்டோ இயக்கப்படும் தொலைவை விரிவாக்கவும், இ-ஆட்டோக்களுக்கு ஓன் போா்டு, டீ போா்டு என வரையறை செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’ அமைச்சா் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புதுவை கலை விழா தொடா்பாக, அரசுத் துறையினருடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்பில் உள்ளனா். காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 1980-களில் நிறுத்தப்பட்டு தண்டவாளம் அகற்றப்பட... மேலும் பார்க்க

பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி

காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியிலுள்ள டிஎம்ஐ செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில், மழலையா் பிரிவில் செயல்வழி கற்றலின் ஒரு அங்கமாக குக் வித் மாம் எனும் தலைப்பில் புகையில்லா சமையல் போட்டி, பெற்றோா்களுக்கு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருநள்ளாறு, அம்பகரத்தூா்

காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் உயா்மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: ஆளுநா் தலையிட கிராமமக்கள் கோரிக்கை

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், புதுவை துணை நிலை ஆளுநா் இப்பிரச்னையில் தலையிடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மா... மேலும் பார்க்க

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டம... மேலும் பார்க்க