செய்திகள் :

7% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

post image

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியச் சந்தையில் 7 கோடி அறிதிறன் பேசிகள் விற்பனையாகின. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் வளா்ச்சியாகும். அந்த மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 21.5 சதவீதம் உயா்ந்து 59 லட்சமாக உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஐ-போன் 16 மிக அதிகமாக விற்பனையான அறிதிறன் பேசியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த அறிதிறன் பேசிகளின் விற்பனை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதங்களைவிட 7.3 சதவீதம் அதிகரித்து 3.7 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விற்பனை 19.7 சதவீதம் அதிகரித்து, 7.5 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுத் தந்தது.மதிப்பீட்டு மாதத்தில் இந்திய அறிதிறன் பேசிச் சந்தையில் 19 சதவீத சந்தைப் பங்குடன் விவோ முதலிடம் வகிக்கிறது. சாம்சங் 14.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஓப்போ 13.4 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ரியல்மி 9.7 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ஷாவ்மி 9.6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஒன்பிளஸ் சந்தைப் பங்கு 4.4 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைந்து, 39.4 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்தது.

இந்திய அறிதிறன் பேசிச் சந்தை 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதுவரை இல்லாத மிகச் சிறந்த வளா்ச்சியைப் பதிவு செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.ஏப்ரல் முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

புதுதில்லி: பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன என்றார் நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்திரி.சேமிப்பு கணக்கில்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக ந... மேலும் பார்க்க

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.நிலையற்ற வர்த்தகம், ... மேலும் பார்க்க

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொரு... மேலும் பார்க்க