செய்திகள் :

ஒரே நாளில் விசாரணைக்கு வரும் 2 வழக்குகள்; முக்கிய கட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

post image

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டம் சார்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வருகிறது. அதனால் போராட்டக்குழுவைப் பொறுத்தவரைக்கும் இன்றைய தினம் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சுரேந்தரின் அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டுமென அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கேட்டுக்கொண்டார்.

வாதங்களை எடுத்து வைக்கும் போது, "சங்கம்தான் அரசை ப்ளாக்மெயில் செய்கிறது" என்றும் பி.எஸ்.ராமன் வாதிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்றைக்கு 46 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.

அதேமாதிரி, வினோத் என்பவர் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கும் தலைமை நீதிபதியின் அமர்வுக்கு முன் இன்றைக்கு விசாரணைக்கு வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

இன்னும் இரண்டு நாட்களில் சுதந்திர தினம் வரவிருக்கும் நிலையில், அதற்குள் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்றே இருதரப்பும் முனைகிறது. அதனால்தான் இன்றைய நாளில் விசாரணைக்கு வரும் இந்த இரண்டு வழக்குகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"போராடும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்" - ஸ்டாலின் வலியுறுத்தல்

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர்... மேலும் பார்க்க

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க