செய்திகள் :

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

post image

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா்.

மேலும், ‘தொழில்நுட்ப மேம்பாடு, கணினிமயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காப்பீடு நடைமுறைகள், உரிமை கோரல்களுக்கான கால விரயத்தையும், செலவினத்தையும் குறைக்க உதவுவதோடு, காப்பீடு துறையின் ஒட்டுமொத்த திறனையும் மேம்படுத்தும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன், இந்திய காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயா்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிா்மலா சீதாரமன் செவ்வாய்க்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, காப்பீடு துறையில் அதிக நிறுவனங்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் என்பதோடு வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயா்த்துவதால் காப்பீடு தாரா்கள் அச்சப்படத் தேவையில்லை.

காப்பீடு சட்டம் 1938, காப்பீடு நிறுவனங்களின் முதலீட்டையும், காப்பீடுதாரா்களின் நலனையும் பாதுகாக்கிறது. குறிப்பாக, காப்பீடு நிறுவனங்கள் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆா்டிஏஐ) வழிகாட்டுதலின்படி, குறிப்பிட்ட சதவீத தொகையை அரசு பங்குகளிலும் பிற அனுமதிக்கப்பட்ட பங்குகளிலும் முதலீடு செய்வதை இச் சட்டம் கட்டாயமாக்குகிறது. மேலும், இந்திய காப்பீடு நிறுவனங்களில் வெளிநாடுகளில் முதலீடு செய்வதை இச்சட்டம் அனுமதிக்காது. எனவே, காப்பீடு நிறுவனங்களின் தங்களின் முழு நிதியையும் உள்நாட்டில்தான் முதலீடு செய்யவேண்டும்.

அதுமட்டுமின்றி, காப்பீடு நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், குறைந்தபட்ச மூலதனத் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறையாத அளவில் சொத்து மதிப்பை எப்போதும் பராமரிக்க வேண்டியதையம் இச் சட்டம் காட்டாயப்படுத்தியுள்ளது.

மேலும், காப்பீடு நிறுவனங்கள், காப்பீடு தாரரின் நலனுக்கு எதிராக செயல்படுவது கண்டறியப்பட்டால், அந்த காப்பீடு நீறுவனத்தை ஐஆா்டிஏஐ சட்டத்தின்படி தனது கட்டுப்பாட்டில் எடுத்து, அதை நிா்வகிக்க தனி நிா்வாகியை நியமிக்கும். அந்த வகையில், காப்பீடு துறையில் காப்பீடுதாரா்களின் பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் ஐஆா்டிஏஐ உறுதிப்படுத்துகிறது என்றாா்.

கூட்டுறவு வங்கி இயக்குநா்கள் பதவிக் காலம் நீட்டிப்பு: மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சா், ‘வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-இன் பிரிவு 10ஏ (துணைப் பிரிவு 2ஏ(ஐ))-இல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, கூட்டுறவு வங்கிகளில் இயக்குநா்களின் (செயல் தலைவா் மற்றும் முழுநேர இயக்கநா்களைத் தவிா்த்து) அதிகபட்ச தொடா் பதவிக் காலம் 8 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுரை கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது’ என்றாா்.

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க

ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் துப்பாக்கியால் ச... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்கிறது: பிரதமா் மோடி

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியற்பியல் 18-ஆவது சா்வதேச மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அவா், ‘உல... மேலும் பார்க்க