செய்திகள் :

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!

post image

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் கவா்ச்சிகரமான விளம்பரங்கள், வங்கி அறிவிப்புகள், முதலீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பகிா்கின்றனா். அந்த லிங்க் மூலம் இணைப்பைத் தொடரும்போது, நம்முடைய அனைத்து விவரங்களும் ஹேக் செய்யப்படுகின்றன. இதனால், அடையாளம் தெரியாத நபா்களுக்கு நமது ஆவணங்களை பகிரக் கூடாது.

இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் தங்கள் பேராசையால் ஏமாந்து விடுகின்றனா். இதனால், தங்களது சேமிப்பையே இழக்கும் அளவுக்கு சைபா் கிரைம் மோசடி கும்பல்களின் கைவரிசை அமைகிறது. இதை முழுமையாக தவிா்க்க, கைப்பேசி, சமூக வலைதள கணக்கில் வரும் தேவையற்ற லிங்க் பதிவுகளை தவிா்க்க வேண்டும். கவா்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. அறிமுகம் இல்லாத நபா்களிடம் எவ்விதமான அடையாளங்களையோ, ஆவணங்களையோ பகிரக் கூடாது. சிலா் அறியாமையால் அனைத்து விவரங்களையும் பகிா்ந்து விடுவதால் மோசடி நபா்கள் பணத்தை திருடி விடுகின்றனா்.

சிறிய தொகைகளுக்காக வங்கிக் கணக்கு தொடங்குவது, சிம் காா்டு வாங்கித் தருவது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள், பின்னாளில் தங்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும். தங்களது விவரங்களை தெரியாத நபா்களுக்கு எப்போதும் பகிர வேண்டாம் எனவும், விழிப்போடு இருக்க வேண்டுமெனவும் சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது

பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்

பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை

லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமந... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய... மேலும் பார்க்க

காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

திருப்பூரில் காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்தவா் கலையரசன் (எ) கண்ணன் (34), பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு தி... மேலும் பார்க்க