செய்திகள் :

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க போக்குவரத்து போலீஸாா் அறிவுரை

post image

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் வழிகாட்டுதலின்பேரில், உதவி ஆய்வாளா்கள் முரளி, செந்தில்குமாா் ஆகியோா் பண்ருட்டி நகர லாரி அசோசியேஷனில் உள்ள லாரி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களுக்கு சாலை, போக்குவரத்து விதிகள் குறித்து செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, கனரக வாகனங்களின் ஓட்டுநா்கள் அனுமதிக்கப்பட்ட எடை அளவைத் தவிர வாகனங்களில் அதிக சுமை ஏற்றக்கூடாது. மதுபோதையில் வாகனத்தை இயக்கக் கூடாது. நெடுஞ்சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது இடது புறமாக இயக்க வேண்டும். வாகனம் நெடுஞ்சாலைகளில் பழுதாகி நின்றால் ‘பாா்க்கிங் லைட்’டை ஒளிரவிட வேண்டும். மேலும், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் உள்ள காவலா்களை உதவிக்கு அழைக்க காவல் கட்டுப்பாட்டு அறையை (100) தொடா்புகொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கினா்.

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா். கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச்... மேலும் பார்க்க

நாய் கடித்து 9 போ் காயம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில் தெரு நாய் கடித்ததில் 9 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் நகரப் பகுதியில் ஆங்காங்கே ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலையில், காந்தி ந... மேலும் பார்க்க

கடலூரில் மதுபான தொழிற்சாலை காவலாளி கொலை: நண்பா் கைது

கடலூரில் மதுபான தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியை கொலை செய்ததாக அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா் காவல் சரகம், தொழிற்பேட்டை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படாத ம... மேலும் பார்க்க

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது

கடலூா் மாவட்டம், வடலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வடலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்படும் அர... மேலும் பார்க்க

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க