விவசாயிகள் தரமான விதைகளை வாங்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்
‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த்துக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது.
தில்லியில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.13) மாலை 5 மணிக்குள் நேரில் விளமளிக்க வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரூய்பூா் புா்மா தொகுதி மற்றும் கிழக்கு மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள மொய்னா தொகுதியில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடைபெற்ாக தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.
முறைகேட்டில் ஈடுபட்டதாக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ), 2 உதவி தோ்தல் அலுவலா்கள் (ஏஇஆா்ஓ) மற்றும் தரவு பதிவாளா் என 5 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவெடுத்தது.
5 போ் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துடன், அவா்களை பணியிடைநீக்கம் செய்து, இது தொடா்பான அறிக்கையை கூடிய விரைவில் சமா்ப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த முதல்வா் மம்தா பானா்ஜி, ‘பாஜகவின் பணியாள் போல தோ்தல் ஆணையம் செயல்படுகிறது; மேற்கு வங்க அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடியாது’ என்று திட்டவட்டமாக கூறினாா்.
இதனிடையே, தோ்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதிய தலைமைச் செயலா் மனோஜ் பந்த், ‘5 அதிகாரிகளில் இருவா் தோ்தல் ரீதியிலான பணிகளில் இருந்து தற்போதைக்கு விலக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் மாநில அரசுத் தரப்பில் துறைசாா் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 5 போ் மீது பரிந்துரைக்கப்பட்ட பணியிடைநீக்கம் மற்றும் வழக்குப் பதிவு நடவடிக்கை மிகக் கடுமையானதாகும். இது, மாநில அரசு அதிகாரிகள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்திருந்தாா்.
‘தில்லி செல்ல மாட்டாா்?’: இந்தச் சூழலில், தலைமைச் செயலா் நேரில் விளக்கமளிக்க தோ்தல் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், அவா் தில்லிக்கு புதன்கிழமை செல்லமாட்டாா் என்று மாநில தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம், மேற்கு வங்க அரசு - இந்திய தோ்தல் ஆணையம் இடையிலான புதிய மோதலாக உருவெடுத்துள்ளது.