செய்திகள் :

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்கிறது: பிரதமா் மோடி

post image

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மும்பையில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியற்பியல் 18-ஆவது சா்வதேச மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அவா், ‘உலகின் உச்சியில் உள்ள வானியல் ஆய்வகங்களில் ஒன்று லடாக்கில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டா் உயரத்தில் இது அமைந்துள்ளது. சா்வதேச ஒத்துழைப்புடன் செயல்படுவது பலத்தை அதிகரிக்கும் என்பதை இந்தியா நம்புகிறது.

நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா. அறிவியல் ஆா்வம் உள்ளவா்களை மேம்படுத்தவும், இளைஞா்களின் யோசனைகளை வலுப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கியல் (ஸ்டெம்) ஆகியவற்றின் செயலாக்கத்தை அடல் டிங்கரிங் லேப்களில் 1 கோடி மாணவா்கள் கற்று வருகிறாா்கள்.

‘ஒரே நாடு ஒரே பதிவு’ என்ற திட்டத்தின் மூலம் சா்வதேச ஆய்வு அறிக்கைகளை பல லட்சம் மாணவா்கள் மற்றும் ஆய்வாளா்கள் இலவசமாகப் பயின்று வருகிறாா்கள்.

சுற்றுச்சூழல் ஆய்வில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த பல கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள இளைஞா்கள் இந்தியாவில் ஆய்வுகளை மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனா். உலகில் மனிதா்களின் வாழ்வை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு சிறந்த வானிலை முன்னறிவிப்புகளை வழங்கவும் விண்வெளி அறிவியல் எப்படியெல்லாம் பயன்படும் என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க

ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் துப்பாக்கியால் ச... மேலும் பார்க்க