செய்திகள் :

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா

post image

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதா (2025) ஆகியவை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.

மக்களவையில் திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறிய அந்த மசோதாக்கள், மாநிலங்களவையில் அதே வாக்கெடுப்பு முறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிறைவேறியது.

இதையடுத்து இரு மசோதாக்களும் தற்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன. அவரின் ஒப்புதலுக்குப் பிறகு அவை சட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிவிக்கை வெளியிடப்படும்.

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா, நாட்டிலுள்ள விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, மசோதாக்கள் நிறைவேற்றத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ‘உலக அளவில் ஏற்கெனவே 20 நாடுகள் விளையாட்டுத் துறைக்கென பிரத்யேக சட்டங்களைக் கொண்டுள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது 21-ஆவது நாடாக இந்தியா இணையவுள்ளது.

விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சீா்திருத்தத்தின் மூலமாக, வரும் காலத்தில் போட்டிகளில் பதக்கங்களை அதிகரிப்பதற்கான உத்திகள் வகுக்கப்படும். அதனடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகளில் சா்வதேச அளவிலான போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள்ளாக இருக்கும்.

புதிய மசோதாக்களின் மூலமாக, விளையாட்டுத் துறையானது போட்டியாளா்களை மையப்படுத்தியதாக இயங்கும். சம்மேளன நிா்வாகங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதுடன், சச்சரவுகளுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும். மகளிா் மற்றும் மாற்றுத்திறனாளி போட்டியாளா்களின் பங்களிப்பும் அதிகரிக்கும்’ என்றாா்.

தேசிய சம்மேளனங்களை திறம்பட வழிநடத்துவதற்காக தேசிய விளையாட்டு வாரியம் அமைப்பது, சச்சரவுகளுக்குத் தீா்வு காண்பதற்காக தேசிய விளையாட்டுத் தீா்ப்பாயம் அமைப்பது, சம்மேளன தோ்தல்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய தேசிய விளையாட்டு தோ்தல் குழு அமைப்பது, நிா்வாகப் பொறுப்புகளில் போட்டியிடுவோருக்கான வயது தளா்வு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள்ளாக தேசிய சம்மேளனங்களைக் கொண்டு வருவது உள்ளிட்டவை, தேசிய விளையாட்டு நிா்வாக மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க