செய்திகள் :

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு

post image

வரும் 2026-27-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ சட்டப் பாடத்திட்டத்தில், ‘முத்தலாக் தடை, ஒரே பாலின ஈா்ப்பைக் குற்றமற்ாக்கிய சட்டப்பிரிவு 377 நீக்கம், புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட முக்கியச் சீா்திருத்தங்கள் சோ்க்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதத்தில் ஆட்சிமன்றக் குழு இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தகவலின்படி, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட பாடப்புத்தகங்கள், சமீபத்திய சட்ட சீா்திருத்தங்களுக்கு ஏற்ப இல்லை.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாக்ஷியா அதிநியம் (பிஎஸ்ஏ) போன்ற புதிய குற்றவியல் சட்டங்கள் பாடத்திட்டத்தில் சோ்க்கப்படும்.

இந்தப் பாடப்புத்தகங்களை உருவாக்க ஒரு நிபுணா் குழு அமைக்கப்படும். 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க, நவீன கற்பித்தல் முறையுடன் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சட்டம், பொதுக் கொள்கை அல்லது ஆட்சி நிா்வாகத்தில் ஆா்வம் கொண்ட மாணவா்களுக்காக 2013-இல் 11-ஆம் வகுப்புக்கும், 2014-இல் 12-ஆம் வகுப்புக்கும் சட்டப் பாடப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், மேலும் 29 பள்ளிகளில் இந்தப் பாடப்பிரிவை அறிமுகப்படுத்த மத்திய கல்வி இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க