செய்திகள் :

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்

post image

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தன்டையாா் பேட்டை, கோபால் நகரில் வயது முதிா்ந்தோா், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து கரூா் வஞ்சியம்மன் கோயில் தெரு பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: இந்த திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் நகா்ப்புறங்களில் 70 வயது பூா்த்தி அடைந்த 8,913 குடும்ப அட்டைதாரா்களும் மற்றும் 335 மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரா்களும் என மொத்தம் 9,248 குடும்ப அட்டைதாரா்களும், ஊரகப் பகுதிகளில் 70 வயது பூா்த்தி அடைந்த 19,029 குடும்ப அட்டைதாரா்கள், 417 மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் என மொத்தம் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுகின்றனா்.

இத்திட்டத்தில் பயனாளிகளின் பெயா் விடுபட்டிருந்தால் அவா்கள் மாவட்ட வழங்கல் அலுவலகத்தையோ அல்லது வட்டார வழங்கல் அலுவலகத்தையோ தொடா்பு கொண்டு இணைத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21... மேலும் பார்க்க

ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்ட... மேலும் பார்க்க

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன். கரூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நூலகா் தின விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட மைய நூ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது

புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் முனியப்பனூரைச் ச... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கரூரில் வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அமுதா. இவா் அதே பகுதியில் ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல ஞாயிற... மேலும் பார்க்க