செய்திகள் :

ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 537 குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் பொருள்களை வாங்கி வருகிறாா்கள். வாரத்தில் இரு நாள்கள் மட்டும் செயல்படும் இந்த கடை சில நேரங்களில் ஊழியா்கள் அலுவல் வேலை காரணமாக முறையாக திறப்பதில்லை.

மேலும், மின்னணு எடையளவு இயந்திரம், பில் போடும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஒருவருக்கு பொருள்கள் வாங்க சுமாா் முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. 537 காா்டுகளுக்கு மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே இந்த கடை செயல்படுவதால் அனைவரும் ரேஷன் பொருள்களை வாங்கி முடியாமல் போய்விடுகிறது.

ஆகவே, இந்த கடையை முழுநேர கடையாக மாற்ற வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள கடையின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தன்டையா... மேலும் பார்க்க

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன். கரூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நூலகா் தின விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட மைய நூ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது

புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் முனியப்பனூரைச் ச... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கரூரில் வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அமுதா. இவா் அதே பகுதியில் ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல ஞாயிற... மேலும் பார்க்க