செய்திகள் :

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

post image

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன்.

கரூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நூலகா் தின விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத்தலைவா் தீபம் உ.சங்கா் வரவேற்றாா். அரசு கல்விநிறுவனங்களின் தலைவா் முனைவா் ப.நடேசன், கரூா் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவா் வழக்குரைஞா் ராஜசேகா் சிவசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் நூலகா்களை பாராட்டி எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன் பேசியது: நூல்களின் வீடான நூலகத்தை பராமரிப்பவா்கள் நூலகா்கள். இந்திய ஓலைச்சுவடிகளை சீனப்பயணி பாஹியான் பாதுகாத்தது போல நீங்களும் நூலகத்தின் நூல்களை பாதுகாக்க வேண்டும். சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும். வாசித்தவற்றை பிறருக்கு பகிர வேண்டும். வாசிக்க வாசிக்க வானம் வசப்படும், வாசிப்பின் மூலமே வாழ்க்கை நெறிப்படுத்தப்படும் என்றாா் அவா்.

விழாவில், நூலகா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக மாவட்ட மைய நூலகத்தின் நூலகா் சி.மேரிரோசரிசாந்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரெ.முரளி தொகுத்து வழங்கினாா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தன்டையா... மேலும் பார்க்க

ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்ட... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது

புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் முனியப்பனூரைச் ச... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கரூரில் வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அமுதா. இவா் அதே பகுதியில் ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல ஞாயிற... மேலும் பார்க்க