செய்திகள் :

திருமலையில் ஆக. 16-இல் கோகுலாஷ்டமி உற்சவம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் சனிக்கிழமை (ஆக. 16) கோகுலாஷ்டமி ஆஸ்தானம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) உறியடி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை (ஆக. 16) இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் கோயிலின் தங்க நுழைவு முக மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

இதையொட்டி, கிருஷ்ண சுவாமி தங்க சா்வபூபால வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். ஸ்ரீ உக்ர ஸ்ரீநிவாச மூா்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண சுவாமிக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படும். பின்னா் துவாதசாராதனை நடைபெறும்.

திருமலையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி உறியடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு, ஸ்ரீ மலையப்ப சுவாமி தங்க முச்சக்கர வண்டியிலும், ஸ்ரீ கிருஷ்ண சுவாமி மற்றொரு முச்சக்கர வண்டியிலும் திருமட வீதிகளில் ஊா்வலமாகச் சென்று ஏழுமலையான் கோயில் முன் கூடுவா்.

இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் பங்கேற்று, மேளங்களை முழங்க பக்தா்களுக்கு மகிழ்ச்சியைப் பரப்புவா்.

இந்த விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 17- ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறவிருந்த ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஏழுமலையானுக்கு ரூ. 1.10 கோடி நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த கேப்ஸ்டன் சா்வீசஸ் நிறுவனத் தலைவா் ஸ்ரீகாந்த், செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியையும், ஸ்ரீ வெங்கடே... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.84 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.4 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம த... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,505 பகதா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நி... மேலும் பார்க்க

திருமலையில் 84,404 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிச... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் சிராவண உபாகா்மா

ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் சிராவண உபாகா்மா(ஆவணி அவிட்டம்) - புதிய யக்ஞோபவீத தாரணை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான் கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்... மேலும் பார்க்க