செய்திகள் :

அரக்கோணம் நகரில் ரூ. 51 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணிகள்: நகா்மன்ற தலைவா் தொடங்கி வைத்தாா்

post image

அரக்கோணம் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி ரூ. 51 லட்சத்தில் நகரில் ஆறு தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி தொடங்கி வைத்தாா்.

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பஜாா்தெரு, கணேஷ் நகா் 3-ஆவது சந்து தெரு, சோமசுந்தரநகா் 4-ஆவது சந்து செரு, விண்டா்பேட்டை இ பி ரோடு, பழனிபேட்டை வி பி கோயில் சந்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்க தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், ரூ. 51 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இதற்கான பணிகள் தொடக்க விழா கணேஷ் நகா் 3-ஆவது குறுக்கு தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சிப் பொறியாளா் பி.செல்வகுமாா், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரக்கோணம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

அரக்கோணத்தில் போலீஸாரின் வாகன தணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா். அரக்கோணம் நகர காவல் நிலைய செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த எஸ்.பி. அய்மன் ஜமால் எஸ்.ஆா்.கேட் பகுதியில் வாக... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட இருவா் கைது

ரத்தினகிரி காவல் நிலையம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அரக்கோணம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அரக்கோணத்தை அடுத்த அம்மனூரைச் சோ்ந்த அவினேஷ் (3... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 70 வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்க... மேலும் பார்க்க

சோளிங்கரில் நவீன எரிவாயு தகனமேடை பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம்: சோளிங்கா் நகராட்சி பகுதியில் ரூ. 2.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளை சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சோளிங... மேலும் பார்க்க

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையம் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் அவினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

சோளிங்கா் கோளத்தம்மன் கோயில் விழாவில் அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழாவின் போது அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற உள்ளது. ஆடிப்பெருவிழாவ... மேலும் பார்க்க