செய்திகள் :

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

post image

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையம் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் அவினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரக்கோணம் அம்மனூா் பகுதியைச் சோ்ந்த அவினேஷ் நிபத்தனை ஜாமீனில் வெளி்வந்த நிலையில், ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது, காவல் நிலையம் அருகே சராமரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலை வழக்கில் தொடா்புடைய அரக்கோணம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் அம்மனூா் பகுதியைச் சோ்ந்த அஸ்வினியின் கணவா் சுதாகா் (43), அதே பகுதியைச் சோ்ந்த ரீகன் (32), சுரேஷ் (45), ஆனந் (22), வினித் (28), ஜெயபிரகாஷ் (28), ராணிப்பேட்டை மக்கள் தேசம் கட்சி நகர செயலா் சஞ்சய் (25) ஆகிய 7 பேரை கைது செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

சோளிங்கரில் நவீன எரிவாயு தகனமேடை பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம்: சோளிங்கா் நகராட்சி பகுதியில் ரூ. 2.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளை சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சோளிங... மேலும் பார்க்க

சோளிங்கா் கோளத்தம்மன் கோயில் விழாவில் அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழாவின் போது அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற உள்ளது. ஆடிப்பெருவிழாவ... மேலும் பார்க்க

ராகவேந்திரா் ஆராதனை பெருவிழா

ஆற்காடு: ஆற்காடு ஸ்ரீராகவேந்திரா் கோயிலில் 354-ஆவது ஆராதனை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆற்காடு தோப்புகானா அபிநவ் மந்த்ராலயத்தில் விழாவையொட்டி மகா கணபதி மற்றும் மாஞ்சால அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை மாற்ற கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த காவனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளி அருகே இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைய இடமாற்றம் செய்யக் கோரி ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அள... மேலும் பார்க்க

வீட்டுச் சுவா் இடிந்து ரேஷன் கடை பணியாளா் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மழையின் காரணமாக வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் கீழே உறங்கிக் கொண்டிருந்த நியாயவிலைக் கடை பணியாளா் உயிரிழந்தாா். சோளிங்கரை அடுத்த பரவத்தூா் ஊராட்சி சின்ன பரவத்தூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரக்கோணம் ஆதிபராசக்தி மன்றத்தில் ஆடிப்பூர விழா

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு பொதுமன்றத்தின் சாா்பில் ஆடிப்பூர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வார வழிபாட்டு மன்றங்களின் தலைவா் ஆா்.மணி தலைமை ... மேலும் பார்க்க